sajith 2
அரசியல்இலங்கைசெய்திகள்

20 இற்கு முடிவுகட்டியே தீருவோம்! – சஜித் சூளுரை

Share

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும், ஒரு குற்றப் பிரேரணை தீர்மானமும் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டுக்குப் பாதகமான பிரேரணைகள் வரும் போதெல்லாம் அவற்றைத் தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாடுபட்டது.

அரசு 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாரிய போராட்டத்தை முன்னெடுத்தது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க அரசு நடவடிக்கை எடுத்தபோது அதை முறியடிக்க சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டு அதனை தோற்கடிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

மேலும் பிற வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

இத்தருணத்திலும் கூட வீதியில் இறங்கிப் போராடும் மக்களின் இதயத் துடிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்ந்து நாட்டுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதியாக இருக்கின்றது” – என்றார்.

தற்போதைய சமகால அரசியல் நெருக்கடி மற்றும் இது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...