image 8f0d2a9289
இலங்கைசெய்திகள்

4 மாதங்களின் பின் ரஷ்ய விமானம் இலங்கைக்கு

Share

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட்(Aeroflot) விமானம் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையில் 4 மாதங்களின் பின் இன்று (10) சேவையை ஆரம்பித்தது..

அரசாங்க அதிகாரிகள், விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் சுற்றுலா அதிகாரசபை அதிகாரிகள், விமான ஊழியர்கள் பயணிகளை வரவேற்க வருகை தந்திருந்தனர்.

அயர்லாந்து நிறுவனத்துடனான வர்த்தக தகராறில் இலங்கை அதிகாரிகள் அதன் Airbus A330 ஜெட் விமானத்தை ஜூன் 4 அன்று தடுத்து வைத்ததை அடுத்து, Aeroflot கொழும்புக்கான அதன் வணிக விமானங்களை நிறுத்தியது. இதன் பின்னர் ரஷ்யா அதிகாரிகளுடன் இலங்கை அரச குழுவினர் நல்லிணக்க பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என ரஷ்ய மாளிகை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மொஸ்கோ, ரஷ்யா மற்றும் கட்டுநாயக்கா ஆகிய நகரங்களுக்கு இடையே 09 மணி நேர நேரடி விமான சேவையை நடத்த உள்ளது.

மேலும், நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில், இந்த விமானங்கள் வாரத்தில் 03 நாட்கள், அதாவது ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இதற்கான 75% விமான டிக்கெட்டுகள் தற்போது விற்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...