24 664aaa563f52d
இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…!

Share

ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உறுப்பினரும் அதிபர் ஆலோசகருமான ஆசு மாரசிங்க (Asu Marasinghe) தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், அரசமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலே முதலில் நடத்தப்படும்

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. எனவே, அதிபர் தேர்தல் முதலில் என்பது உறுதி.

ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும். நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் அதிபருக்கே உள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார்.

ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிபர் தேர்தலையே முதலில் கோருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ester attac 2
இலங்கை

நீதிபதிகளுக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு – வெளியாகியுள்ள முக்கிய பாதுகாப்பு.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்உடனடியாக நடைமுறைக்கு...

ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...