24 664aaa563f52d
இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…!

Share

ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உறுப்பினரும் அதிபர் ஆலோசகருமான ஆசு மாரசிங்க (Asu Marasinghe) தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், அரசமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலே முதலில் நடத்தப்படும்

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. எனவே, அதிபர் தேர்தல் முதலில் என்பது உறுதி.

ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும். நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் அதிபருக்கே உள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார்.

ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிபர் தேர்தலையே முதலில் கோருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...