கொள்ளையர்கள் கைவரிசை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

Share

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டுத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துக்குள் புகுந்து மூல விக்கிரகத்தைப் புரட்டி அதன் கீழிருந்த தகடுகளைத் திருடிச் சென்றுள்ளதுடன் திருப்பணி உண்டியலையும் உடைத்துக் களவாடியுள்ளனர்.

இந்த ஆலயத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மஹா கும்பாபிசேஷம் இடம்பெற்ற நிலையில் குறித்த சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...