கொள்ளையர்கள் கைவரிசை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

Share

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டுத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துக்குள் புகுந்து மூல விக்கிரகத்தைப் புரட்டி அதன் கீழிருந்த தகடுகளைத் திருடிச் சென்றுள்ளதுடன் திருப்பணி உண்டியலையும் உடைத்துக் களவாடியுள்ளனர்.

இந்த ஆலயத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மஹா கும்பாபிசேஷம் இடம்பெற்ற நிலையில் குறித்த சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...