tamilni 65 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு அறிவித்தல்

Share

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு: பொதுமக்களுக்கு அறிவித்தல்

கொழும்பின் சில வீதிகள் இன்று முதல் மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில வீதிகள் இன்று (05.2.2024) முதல் 03 கட்டங்களாக மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து தடை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் தொடருந்து கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி 20 முதல் மார்ச் 04 வரையிலும் மூடப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை வழியாக ரொட்டுண்டாகார்டன் சந்தி வரையான பகுதி மார்ச் 05 முதல் 11 வரை மூன்றாம் கட்டமாக மூடப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி குழாய்கள் பதிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாலேயே குறித்த வீதிகள் முடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...