tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினம்

Share

பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினம்

நாட்டில் சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாது அல்லல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டதினை கண்டிக்கும் வகையில் அவர் முகநூலில் பதிவொன்றினையிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு,

76 ஆவது சுதந்திர தினம் எங்களுக்கு உண்மையான சுதந்திரமா? நாட்டில் 70 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது மூன்று வேளை சாப்பாட்டைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது அல்லல்படுகின்றனர்.

சுதந்திர தினத்தில் வானத்தில் குத்துக்கரணம் அடிப்பதனால் மக்களின் பசியை போக்கிவிட முடியாது. அதன் மூலம் நாம் சுதந்திரத்தினை மறந்துவிட வேண்டும் என்று கூறவில்லை. மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் தேடிக்கொண்ட பணத்தினை வெறும் வேடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றே நான் குறிப்பிடுகின்றேன்.

எவ்வித ஆட்டமும் பாட்டமும் இன்றி அழகாக இதனை கொண்டாட முடியும். இவ்வாறு பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினத்தினை நான் புறக்கணிக்கின்றேன் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...