siril G 1000px 8 11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் நாளை வாக்குமூலம் வழங்கவுள்ள அருட்தந்தை சிறில் காமினி!

Share

அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம்  வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்களுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அருட் தந்தை சிறில் காமினி உட்பட சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்  அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைக்கு  அவரை ஆஜாராகும்படி இரண்டு தடவைகள்  அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் அவர் ஆரஜாரகவில்லை.

அவர் அதற்கு கால அவகாசம் கோரிய நிலையில், இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய சிறில் காமினி ஆஜாராகினார்.

மேலும், 7 மணித்தியாலயங்கள் தொடர் விசாரணையின் பின்னர் மீண்டும் நாளை சிறில் காமினி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...