mattala
இலங்கைசெய்திகள்

மீண்டும் சர்வதேச சேவைகள் ஆரம்பம்

Share

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஏறக்குறைய இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (29) முதல் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்தள விமான நிலைய அட்டவணையின்படி, கடைசியாக 2021 ஆம் ஆண்டு பயணிகள் விமானம் வந்துள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.

நாட்டின் வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கான விமான நிலையமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.

‘ரெட் விங்ஸ்’ விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ரஷ்யாவில் இருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் 2023 ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு 2 விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

அதனை 3 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...