துறைமுக அதிகார சபையின் பொறுப்பில் உள்ள 500 சீனி கொள்கலன்கள் சதொசவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சீனி கொள்கலன்களை சதொசவுக்கு வழங்க சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோது நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலன்களே இவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா சதொச தலைவர்ருடன் கலந்துயாடல் மேற்கொள்ளப்பட்டு சீனி தொகையை சதொசவுக்கு வழங்க இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சதொசவுக்கு வழங்கப்படுகின்ற சீனி நாடளாவிய ரீதியில் உடனடியாக விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment