276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு! – கைதாவாரா கோட்டா?

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி பதவியைத் துறந்தமையால் கோட்டாபய ராஜபக்ச விடுபாட்டுரிமையை – சிறப்புரிமையை இழந்துள்ளார். அவரை நீதியின் முன்நிறுத்தவேண்டும் என்று கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்தவர்களில் ஒருவரான இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாவை ஏற்றுக்கொள்வதற்கு எந்த நாடும் தயாரில்லாத காரணத்தால்தான் அவர் நாடு திரும்பினார் என்று தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின் அவர் மறைந்திருப்பதற்கு எங்கும் இடமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

22 மில்லியன் மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியமைக்காக அவரைக் கைது செய்யவேண்டும் என்றும், அவர் இழைத்த குற்றங்களுக்காகத் தண்டிக்கவேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையால் அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும், தற்போது அவர் சிறப்புரிமையை இழந்துள்ளமையால் அந்த வழக்குகளில் அவர் மீளவும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Screenshot 2025 04 03 155037 e1743676594629
செய்திகள்இலங்கை

கடும் இடிமின்னல் எச்சரிக்கை: இரவு 11 மணி வரை பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்!

இன்று (நவ 13) இரவு 11.00 மணி வரை கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

1744128799 6195948 hirunews
செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கு, கிழக்கில் இராணுவ வசமுள்ள துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டும்; நினைவுகூர அரசு வழிவகுக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன்!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்களை உடனடியாக விடுவித்து, அவற்றை...

1660822330330 690785 850x460
இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்காக அல்ல, அதிகாரத்தைக் கைப்பற்றவே: மொட்டுக் கட்சி மற்றும் UNP-ஐ நிராகரித்த வசந்த முதலிகே!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

passport 1200px 10 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

புல்மோட்டை வீதியோரத்தில் கைவிடப்பட்ட ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மீட்பு: மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை!

புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த, இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை புல்மோட்டை...