image a37de7ddfe
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாயமான நால்வரும் சடலங்களாக மீட்பு

Share

வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன இளைஞர்கள் நால்வரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரின் சடலங்களும் புதன்கிழமை (22) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.ஜி.சந்திரகுமார தெரிவித்தார்.

பொத்துவிலுக்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து 5 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 10 இளைஞர்கள் எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளனர்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பகுதியில் நீராடிய  போதே 4 பேர் மூழ்கியதாகவும் அதில் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்ட போதும் சீரற்ற வானிலையால் ஏனையோரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதன்கிழமை (22) காலை முதல் கடற்படையினரும் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர் நால்வரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 20 வயதான அபூபக்கர் ஹனாஃப்,  முஹம்மது நஹ்பீஷ், மொஹமட் லபீர் மொஹமட் சுஹூரி,  முகமது அப்சல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...