ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ஆசனத்திலிருந்து ஜனாதிபதி கொடி, இலச்சினை அகற்றம்!

Share

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலச்சினை முதல் முறையாக அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அந்த ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது நாடாளுமன்றத்துக்கு தலைமைதாங்கி, ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றவுள்ளார். சபாபீடத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தே ஜனாதிபதி உரையாற்றுவார்.

அந்த ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலட்சியையே அகற்றப்படவுள்ளது.

ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும், ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...