Privete Bus 567657 scaled
இலங்கைசெய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அடுத்த வாரம் முதல் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக 17 ஆயிரம் பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பஸ்களை சேவைக்கு ஈடுபடுத்த முன்னர் டயர் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட தேவைகளுக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...