central bank of sri lanka
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் கடன் பெற்றோருக்கு நிவாரணம்!

Share

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களின் எதிர்கால கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வணிகம் அல்லது திட்டங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

தற்போதுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அரச நிறுவனங்கள் உட்பட பல தரப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ள நிலையிலேயே மத்திய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...