Supermarket Prices Trade Goods 02
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Share

செத்தல் மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (26) முதல் அமுலாகும் வகையில் குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் குறைக்கப்பட்ட விலைகளில் 6 பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென சதொச அறிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,700 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசி 10 ரூபாய் குறைக்கப்பட்டு 169 ரூபாக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 8 ரூபா குறைக்கப்பட்டு 179 ரூபாய்க்கும்  ஒரு கிலோகிராம் வௌ்ளை நாடு (உள்நாடு) 5 ரூபாய் குறைக்கப்பட்டு 184 ரூபாக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச அறிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு மற்றும் கீரி சம்பா ஆகியவை தலா 5 ரூபாயால் குறைப்பட்டு முறையே 365 மற்றும் 235 ரூபாகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...