Supermarket Prices Trade Goods 02
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Share

செத்தல் மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (26) முதல் அமுலாகும் வகையில் குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் குறைக்கப்பட்ட விலைகளில் 6 பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென சதொச அறிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,700 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசி 10 ரூபாய் குறைக்கப்பட்டு 169 ரூபாக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 8 ரூபா குறைக்கப்பட்டு 179 ரூபாய்க்கும்  ஒரு கிலோகிராம் வௌ்ளை நாடு (உள்நாடு) 5 ரூபாய் குறைக்கப்பட்டு 184 ரூபாக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச அறிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு மற்றும் கீரி சம்பா ஆகியவை தலா 5 ரூபாயால் குறைப்பட்டு முறையே 365 மற்றும் 235 ரூபாகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...