300816991 6342997879061088 509027797938256841 n
இலங்கைசெய்திகள்

அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளை குறைக்குக! – ஐ.நா. சபை உறுப்பு நாடுக்கு அறிவிப்பு

Share

நியூயோர்க் நகரில் கொரோனா நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், செப்ரெம்பர் 20 ஆம் திகதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை குறைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தனது 193 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவது ஜனாதிபதியா, வெளிவிவகார அமைச்சரா அல்லது தூதுவரா என்பது மிக முக்கியமான கேள்வியாக சண்டே ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் பொதுவாக இலங்கையிலிருந்து 132 பிரதிநிதிகள் பங்கேற்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களின் வரிப்பணத்தில் விடுமுறை எடுப்பதற்காக பிரதிநிதிகளாகப் பங்கேற்பதோடு, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதிலும், அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தொழிலதிபர்களிடம் தள்ளுபடியில் பொருட்களை வாங்குவதிலும், அமெரிக்காவில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என சண்டே ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடமும் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்றை பங்கேற்க வைப்பதென தீர்மானித்தால், அதில் எத்தனை பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் என்பதை கூற முடியாது எனவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...