8 12
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருக்கும் சாரா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Share

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் சாராவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியது இந்தியாவே. ஆனால் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் எந்தவித பாதுகாப்பும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.ஏனென்றால் அவர்களுக்கு தாக்குதல் நடக்காது என்று தெரியும் என்பதால் ஆகும் என 2021 ஆம் ஆண்டு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

தாக்குதலின் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு வந்து சாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார் என்றார். அதனால் இந்தியாவிடம் சாராவை கேட்கலாம்.

இந்த நாடு கத்தோலிக்க மக்களை ஏமாற்றியுள்ளது.

நல்லாட்சி அரசில் 700 பேரை கைது செய்தோம். உங்களுக்கு இது தொடர்பில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

மேலும், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...