Ranjan ramanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

ரஞ்சன் விடுதலை! – ஏற்பாடுகள் தீவிரம்

Share

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரையை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை என்பவற்றை பெற்று, ஆராய்ந்த பின்னரே, – ‘பொதுமன்னிப்புக்கான’ பரிந்துரையை நீதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

” பொதுமன்னிப்பு நடைமுறை உரிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சட்டமா அதிபரிடம் ஆலோசனையும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கையும் பெறப்பட்டது. இவற்றை ஆராய்ந்த பின்னர் நிபந்தனை ஒன்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தண்டனை, அரசியல் பழிவாங்கல் அல்ல, நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்காக ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புகோரி, நீதிமன்றத்துக்கு சத்தியக்கடதாசியொன்றை வழங்க வேண்டும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட நகர்வு இடம்பெறும்.

பொதுமன்னிப்பு தொடர்பிலும், அதற்கான காலப்பகுதி சம்பந்தமாகவும் ஜனாதிபதியே முடிவெடுப்பார்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கால கடூழிய சிறை தண்டனை 2021 ஜனவரி மாதம் விதிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே குறித்த தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன்பின்னர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் பல தரப்புகளும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...