சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் நோக்கம் நிறைவேறி வருகிறது!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற நோக்கத்தை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டை பொறுப்பேற்றார்.

அவர் தற்போது தமது பொறுப்பை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை சமையல் எரிவாயு வரிசை இல்லாதொழிக்கப்பட்டு வழமையான நிலை திரும்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியபோது நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டைப் பொறுப்பேற்பதற்காக அவர் பலகட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். எவரும் அதற்கு பதில் வழங்கவில்லை. அதனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் நாட்டை கையளித்துள்ளார் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உர நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரத்தைப் பெற்றுக்ெகாள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...