ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்தவர் ரணில்! – புகழும் பெரமுன எம்பி

Share

” புலிகளிடமிருந்து மஹிந்த ராஜபக்சவே அன்று நாட்டை பாதுகாத்தார். அதேபோல நாட்டில் அண்மையில் தோற்றம்பெற்ற (போராட்டம்) பயங்கரவாதிகளிடம் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை பாதுகாத்தார்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

” ஜனாதிபதியின் வீட்டையும் எரித்தனர், எனது வீட்டையும் கொளுத்தினர். இந்த செயலை அரச விரோத சூழ்ச்சியாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போதைய ஜனாதிபதியால்தான் எம்மால் சுதந்திரமாக நடமாட முடிகின்றது.

ரணில் தொடர்பில் விம்பமொன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி அந்த ரணில் அல்லர். அவர் சிறப்பானவர். அந்த நம்பிக்கை உள்ளது.” – எனவும் குறிப்பிட்டார் எஸ்.எம். சந்திரசேன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...