rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

பயணப் பாதையை மாற்றிய ரணில்

Share

பயணப் பாதையை மாற்றிய ரணில்

மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்வதை தவிர்த்து ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம்(07.10.2023) மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், அந்த வீதியால் பெருமளவான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அடிக்கடி ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் போராட்டத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

இதன்போது உடனடியாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் செல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...