tamilni 108 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

Share

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஆகியோர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரைகளை ஆற்ற உள்ளனர்.

ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்றம், தேசிய தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறை ஒன்றின் அடிப்படையில் தேசிய தேர்தல்களை நடத்த முடியுமா என கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை நாட்டின் கிரிக்கெட் துறையில் நிலவிவரும் நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழு ஒன்றை நியமித்தமை தொடர்பில் அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...