tamilni 108 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

Share

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஆகியோர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரைகளை ஆற்ற உள்ளனர்.

ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்றம், தேசிய தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறை ஒன்றின் அடிப்படையில் தேசிய தேர்தல்களை நடத்த முடியுமா என கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை நாட்டின் கிரிக்கெட் துறையில் நிலவிவரும் நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழு ஒன்றை நியமித்தமை தொடர்பில் அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...