ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என ஐ.தே.கவின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
‘நாட்டை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment