17 7
இலங்கைசெய்திகள்

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

Share

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதியில் உயர்தர தொழில்முறை நண்பர்களுடன் நடத்திய சந்திப்பின் போது புதிய நாடாளுமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து கேலிக்கூத்தான கருத்துக்கள் வெளிவந்த போதே விக்ரமசிங்க இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்

அக்கருத்துக்களை செவிமடுத்த ரணில், “நாடாளுமன்ற விவகாரம் குறித்து விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்” என தெரிவித்ததுடன் எதனையும் கேலி செய்யவில்லை என்றும், அதற்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை (Karu Jayasuriya)அழைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைத்து தனது விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...