6 27
இலங்கைசெய்திகள்

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Share

அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளார்.

சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, ஹர்ஸ டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி போன்றவர்களினால் இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அரசாங்கம் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் மேடைகளில் மக்களின் கஸ்டங்களை பற்றி பேசுவது பொருத்தமற்றது என ஜனாதிபதி விமர்சனம் செய்துள்ளார்.

அனுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் இதனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கஸ்டங்களை புரிந்து கொண்டிருந்தால் நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை திருத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...