3 12
இலங்கைசெய்திகள்

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

Share

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் கடற்றொழிலாளர்களுக்கு இடையில், பாக் வளைகுடாவில் நீடித்து வரும் கடற்றொழிலாளர் மோதலுக்கு இந்திய தரப்புகள் இழுவை முறையை பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல வருடங்களாக கடற்றொழிலாளர் பிரச்சினை முக்கிய இராஜதந்திரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த வாரம் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து இனக்குழுக்கள் மற்றும் புவியியல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தமது கட்சிக்கு உள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் 17.2 கிலோவாக இருந்த நாட்டின் தனிநபர் மீன் நுகர்வு இப்போது 11.07 கிலோவாகக் குறைந்துள்ளது. இது மக்களின் புரத உட்கொள்ளல் குறைவதைப் பிரதிபலிக்கிறது.

இந்தநிலையில், ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய, இலங்கையின் கடல் மற்றும் நமது கடல் பல்லுயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பலருக்கு இன்னும் தமிழ்நாட்டில் குடும்ப உறவுகள் உள்ளன.

எனவே, கடற்றொழில் பிரச்சனையில் பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என இந்திய மற்றும் தமிழக மக்களையும் அரசாங்கங்களையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...