tamilni 352 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கையர் தொடர்பில் நடவடிக்கை

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இலங்கையர் தொடர்பில் நடவடிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகன் என்பவரை இங்கிலாந்துக்கு நாடு கடத்த முடியாது என மத்திய அரசு, சென்னை மேல்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

எனினும் அவரை அவரது தாய்நாடான இலங்கைக்கு நாடு கடத்தமுடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட முருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று (19.12.2023) இடம்பெற்றபோது, வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி இந்த விடயத்தை சமர்ப்பித்தார்.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்து செல்வதற்கான பயண ஆவணங்களை முருகன் கோரியிருந்தார். ஆனால் அத்தகைய அனுமதி அல்லது வெளியேற உத்தரவை வழங்க முடியாது என இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அவரது ஆவணங்களை அனுப்பியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மனுதாரருக்கு கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்களை வழங்கினால் மட்டுமே, இந்திய வெளியுறவு அமைச்சு அடுத்த பணிகளை தொடரமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் முருகன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் இங்கிலாந்தில் உள்ள தனது மகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக முருகன் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து, முருகனின் இந்த மனுவை சென்னை மேல்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...