image 9e4efc0d9d
அரசியல்இலங்கைசெய்திகள்

கைதிகள் விடுதலைக்காக குரல் கொடுங்கள்!!

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாரர்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஒன்றாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விடுதலைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் பேரில்,   பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன்.

எனக்கெதிரான வழக்கு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நீதிமன்றத்தால் எனக்கு ஆயுட்சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தேன். அந்த வழக்கு விசாரணை ஐந்து வருடங்களாக நடைபெற்றதன் பின்னர், எனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனை மீளுறுதி செய்யப்பட்டது.

அதனை ​எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன். சுமார் ஏழு வருடங்களாக அந்த நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில்தான், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மற்றும் நல்லிணக்க அடிப்படையில் நான் உட்பட 3 பேருக்கு பெப்ரவரி 1ஆம் திகதியன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது.

அன்றையதினமே ஏனைய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். நான், தாக்கல் செய்திருந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தமையாலும் அதனை நான் வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதாலும் சட்டநடவடிக்கை மற்றும் நிர்வாக நடவடிக்கையால் எனது விடுதலை தாமதமானது.

சிறைச்சாலையில். தண்டனையளிக்கப்பட்ட கைதிகளாக 10 தமிழ் அரசியல் கைதிகளும் விளக்கமறியல் கைதிகளாக 14 கைதிகளும் இருக்கின்றனர். ஆகையால் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கவேண்டும்.

அத்துடன், “அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒவ்வொரு மனித உரிமை அமைப்புகளும் கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் கைகோர்க்க வேண்டும். அது நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும்.” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...