அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Bus fares

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது பஸ் கட்டணம் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அரச மற்றும் தனியார் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை 14 ரூபாவிலிருந்து 17 ரூபாவரை அதிகரிப்பதற்கும், ஏனைய கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 05 ஆம் திகதி முதல் புதிய பஸ் கட்டணம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே, பஸ் கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version