அரசியல்இலங்கைசெய்திகள்

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபியுங்கள் – எதிரணிக்கு காஞ்சன பகிரங்க சவால்

Kancha Wijesekara
Share

நாட்டில் மஹிந்த அலையை உருவாக்கி, மஹிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களே தற்போது, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலக வேண்டும் கோஷம் எழுப்புகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கூறிவிட்டு, யாரை இவர்கள் அழைத்து
வரப்பார்க்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவையா, அநுரகுமார திஸாநாயக்கவையா,
சம்பிக்கவையா? அல்லது தங்களது மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவா மஹிந்தவை அவர்கள் விலகச் சொல்கிறார்கள்?

உண்மையில் எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமாக இருந்தால், அல்லது அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்ததாக நீங்கள்bநினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவாருங்கள்.

ஆளுங்கட்சியினர் சுயாதீனமாகச் செயற்படுவதாகக் கூறினாலும் எவரும் அரசிலிருந்து விலகவில்லை. அவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு சென்று அமரவில்லை. எவராவது தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவார்களாக இருந்தால், அதனை விட அவர்கள் பதவிகளில் இருந்து விலகுவதே நல்லது எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...