Kancha Wijesekara
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபியுங்கள் – எதிரணிக்கு காஞ்சன பகிரங்க சவால்

Share

நாட்டில் மஹிந்த அலையை உருவாக்கி, மஹிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களே தற்போது, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலக வேண்டும் கோஷம் எழுப்புகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கூறிவிட்டு, யாரை இவர்கள் அழைத்து
வரப்பார்க்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவையா, அநுரகுமார திஸாநாயக்கவையா,
சம்பிக்கவையா? அல்லது தங்களது மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவா மஹிந்தவை அவர்கள் விலகச் சொல்கிறார்கள்?

உண்மையில் எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமாக இருந்தால், அல்லது அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்ததாக நீங்கள்bநினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவாருங்கள்.

ஆளுங்கட்சியினர் சுயாதீனமாகச் செயற்படுவதாகக் கூறினாலும் எவரும் அரசிலிருந்து விலகவில்லை. அவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு சென்று அமரவில்லை. எவராவது தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவார்களாக இருந்தால், அதனை விட அவர்கள் பதவிகளில் இருந்து விலகுவதே நல்லது எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12
இலங்கைசெய்திகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை சடுதியாக உயர்வு: ஒரு கிலோ கரட் ரூ.1000 வரை விற்பனை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு (Dambulla Economic Centre)...

MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...