gota 3
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட வன்முறைகள்! – ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

Share

நாட்டில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜுலை 14 ஆம் திகதி பதவி விலகினார். அதன்பின்னர் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் காலத்தை நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...