24 66f8ce3f915ac 6
இலங்கைசெய்திகள்

இலவச விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசு வழங்கிய பதில்

Share

இலவச விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசு வழங்கிய பதில்

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த பிரச்சினைக்கு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் (Vijitha Herath) பதிலளித்துள்ளார்.

தற்பொழுது நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ள நிலையில், இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதாகவும் இதனால் இவ்வாறு தாமதம் நீடிப்பதாகவும் அவர் அதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் படி, நாடாளுமன்றம் இயங்காமல் செயற்படுவதற்கான தெரிவுகள் குறித்து ஆராய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை தாமதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை தற்போது தனது கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க முடியாமல் திணறி வருவதாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அமைச்சர் விஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹேரத், உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளினால் இலங்கை தற்போது பழைய முறைமையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...