நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!
நாட்டில் எதிர்வரும் மாதத்தின் பின்னர் மின் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவிக்கையில்,
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் மின்கட்டணங்கள் செலுத்தவில்லை. இந்த நிலையில் இதுவரை 44 பில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் 2 அல்லது 3 மாதங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியை மின்சார சபை எதிர்கொள்ளும்.
இதனால் மின் வழங்கலில் தடை ஏற்படும். எனினும் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி மின் தடை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது.
மக்கள் இந்த நிலையை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.
Leave a comment