kamini scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!

Share

நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!

நாட்டில் எதிர்வரும் மாதத்தின் பின்னர் மின் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவிக்கையில்,

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் மின்கட்டணங்கள் செலுத்தவில்லை. இந்த நிலையில் இதுவரை 44 பில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் 2 அல்லது 3 மாதங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியை மின்சார சபை எதிர்கொள்ளும்.

இதனால் மின் வழங்கலில் தடை ஏற்படும். எனினும் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி மின் தடை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது.

மக்கள் இந்த நிலையை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...