18 5
இலங்கைசெய்திகள்

துமிந்த சில்வாவின் சிகிச்சை அறை புகைப்படங்களை வெளியிட்ட சிறைச்சாலைகள் திணைக்களம்

Share

மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா, சிறைச்சாலை மருத்துவமனையில் சிறப்பு வசதிகளைப் பெறுவதாக வெளியான செய்திகளை சிறைச்சாலை திணைக்களம் மறுத்துள்ளது.

மேலும், துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வரும் தங்கி சிகிச்சைப்பெறும் அறையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனையின் அரை எண் 3 இல், 50க்கும் மேற்பட்ட கைதிகளுடன் துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் இயக்குநர், துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்ததாகவும் திசாநாயக்க கூறியுள்ளார்.

சில்வா தற்போது சிறை மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க சிறைச்சாலைத்திணைக்களம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், முறையான கோரிக்கையை முன்வைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிலைமையை மதிப்பிடுவதற்கு ஒரு மருத்துவக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது,

மேலும் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைத் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, துமிந்த சில்வா உட்பட சிறையில் உள்ள சில கைதிகளுக்கு சிறைச்சாலைத்திணைக்களம்,சிறப்பு வசதிகளை வழங்குவதாக கைதிகள் உரிமைகள் குழு குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே இந்த தெளிவாக்கல்களை சிறைச்சாலைகள் பேச்சாளர் வழங்கியுள்ளார்.

இரண்டு முதற்கட்ட விசாரணைகள் மற்றும் தள ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, சில்வாவுக்கு தனி கழிப்பறை அல்லது வேறு எந்த சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்ததாகவும், சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் .

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...