வேலை நிறுத்தம் e1650687947895
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிபர்கள், ஆசிரியர்கள் திங்கள் வேலை நிறுத்தம்!

Share

தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மாணவர்களும் ஊழியர்களும் பாடசாலைக்கு செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணி புரிவதற்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்று அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசு வழங்க வேண்டும் என்று கோரி எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...