தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மாணவர்களும் ஊழியர்களும் பாடசாலைக்கு செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணி புரிவதற்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்று அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசு வழங்க வேண்டும் என்று கோரி எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment