tamilni 376 scaled
இலங்கைசெய்திகள்

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்

Share

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்

இலங்கையில் மதிய உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) விசேட அறிக்கையொன்றை முன்வைத்த போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று பாடசாலை மாணவர்களுக்கு சுற்றப்பட்ட மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை கட்டாயமாக உண்ணுமாறு அதிபர் பணித்ததான செய்தி வெளியாகியது.

இந்த நிலையில் நேற்று கல்வி அமைச்சர் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரை அழைத்து இது குறித்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் 11ம் தர மாணவர்கள் குழுவொன்று மதிய உணவை பொலித்தீனில் சுற்றப்பட்டு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்படுவதால், மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்ததாகவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஏனைய ஐந்து மாணவர்களும் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாகவும், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பஸ்பாவின் பிரதேச கல்விப் பணிப்பாளரினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...