Dinesh Gunawardena
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டு அரசு தொடர்பில் பிரதமர் விளக்கம்!

Share

கூட்டு அரசில் இணைந்து செயலாற்றுவதானால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இணக்கப்பாடு காணும் விடயங்கள், இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத விடயங்களை விட அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் உருவாகக்கூடியது. கூட்டு அரசாங்கத்திற்கான சவால் நமது நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் உருவாகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், கூட்டு அரசாங்கம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்து செயற்படக்கூடிய அந்நியோன்ய நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெற்ற நாம் அனைவரும் அதன் மேலும் ஒரு படியாக நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

நாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டாலும் அல்லது பெற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய சவால் மற்றும் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்தினவிற்கும் இடையில் நடைபெற்றுள்ள கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...