image 90a46f312f
இலங்கைசெய்திகள்

விலைகள் குறைப்பு

Share

தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை மறுதினம் (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமை மற்றும் கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்ட கோழி இறைச்சி மற்றும் மீன் என்பவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் உணவுகளின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பல விடயங்களை கருத்திற் கொண்டு புறக்கோட்டை மொத்த சந்தையில் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விலை 225 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோதுமை மாவின் மொத்த விலை 250 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...