24 66342ee869083
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டும் பொருட்கள் விலைகள் குறையவில்லை

Share

எரிபொருள் விலை குறைக்கப்பட்டும் பொருட்கள் விலைகள் குறையவில்லை

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறையவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் என்பன குறைக்கப்பட்ட போதிலும் அதன் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவுபடுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயு என்பனவற்றின் விலைகள் சிறிய தொகையில் அதிகரித்தாலும் ஏனைய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் விலை குறைக்கப்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சபாநாயகா மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்ட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...