24 663439f77bcf4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

Share

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

வருடாந்தம் சுமார் 2.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு கடனாக செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் செலுத்துதல் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த தொகை கடனாக செலுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இருதரப்பு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் வருடாந்தம் சுமார் 5 பில்லியன் டொலர்களை செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், 2022 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களும், 2023 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கடனாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...