இலங்கைசெய்திகள்

நினைவேந்தலில் ஜனாதிபதி கோத்தாபய!

gottaa scaled
Share

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும்  நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியில் இடம்பெற்றுள்ளது.

2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11 ம் திகதி நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்டகன் ஆகியவற்றை இலக்குவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஐ.நா. பொதுச்சபையின் 76வது கூட்டத் தொடரில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயோர்க் பயணம் மேற்கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கெளரவமளித்தனர்.

got

got 4

gott

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....