1734575149 1
இலங்கைசெய்திகள்

சீனாவின் அவசர நிதியுதவிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி!

Share

அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இலங்கைக்குச் சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் தாராளமான ஆதரவிற்காகச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஆழமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பல ஆண்டுக் கால நட்புறவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சீனா 1 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 10 மில்லியன் RMB மதிப்புள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வலிமை மற்றும் உதவியை வழங்கி, கடினமான தருணங்களில் சீனா தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘Rebuilding Sri Lanka’ (இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்) என்ற நிதியம் நிறுவப்பட்டு, நாடு தற்போது மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு கட்டத்திற்கு மாறியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான உதவி மற்றும் ஆதரவு நடவடிக்கைகளில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...

Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...