2 8
இலங்கைசெய்திகள்

வெளிநாடு பறக்கிறார் ஜனாதிபதி அநுர

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumarra dissanayake) பெப்ரவரி 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு(uae) அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி துபாயில்(dubai) நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றுவார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியுடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கி இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்  இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...