8 49
இலங்கைசெய்திகள்

வடக்கிற்கு வீதியால் பயணிக்கும் அநுர: உலங்குவானூர்தியை பயன்படுத்த வலியுறுத்து!

Share

வடக்கிற்கு வீதியால் பயணிக்கும் அநுர: உலங்குவானூர்தியை பயன்படுத்த வலியுறுத்து!

வடக்கிற்கு வீதிகள் வழியாக பயணம் செய்யும் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.

இன்றைய (24.2.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara Dissanayake) உலங்குவானூர்திகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலங்குவானூர்திகளின் மூலம் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், இதனை மூடிவைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...

body
இலங்கை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம்!

நேற்று காலை மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின்...

Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...