4 39
இலங்கைசெய்திகள்

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

Share

முடிவை அறிவித்த ஜனாதிபதி அநுர: பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் பேரிடி

எதிர்வரும் காலங்களில் பாதாள உலகத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) கூடிய 10வது நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்குள் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் பாதாள உலக கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை நாட்டினுள் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பெறும் அதிர்வலையை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட அவரின் சாரதி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்  என மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, துப்பாக்கி சூட்டிற்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்வதற்காகவும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, அதற்கு பொதுமக்களின் உதவியும் காவல்துறையினரால் நாடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த சம்பவத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்து வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...