image 516387d0e4
இலங்கைசெய்திகள்

மின் கட்டண உயர்வு – சட்ட நடவடிக்கைக்கு இறங்குகிறார் ஜனக

Share

தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை குறித்து எதிர்வரும் இரண்டு நாட்களில்  தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தனது அலுவலகத்துக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

30 முதல் 90 வரையிலான மின்சார அலகுகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட 5 மில்லியன் மக்களுக்காக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணமானது 250 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தி நீதிமன்றத்துக்கு செல்வதாக தலைவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக பல நாட்களாக வெளிநாட்டுக்கு சென்ற தாம் நாடு திரும்பிய போதும் தனது அலுவலகம் தனக்காக திறக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவர் அலுவலகத்துக்கு வருகை தந்த போது, அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட வில்லை என்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு பின்னர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...