Marikkar
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் அரசியல் நாடகம்! – மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்கிறார் மரிக்கார் எம்.பி

Share

அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் என அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ஆனால் அமைச்சுகளுக்கான வரப்பிரதாசங்களை அவர்கள் இன்னமும் அனுபவிக்கின்றனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. ஆனால் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம் வரவில்லை. வாகனங்கள், வீடுகள் மீளப்பெறப்படவில்லை.

அமைச்சுகளுக்கான அரசியல் நியமனங்களும் தொடர்கின்றன. எனவே, பதவி துறப்பு என்பது வெறும் நாடகம். எனவே, இந்த அரசு வீடு செல்லும்வரை மக்கள் போராட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

” பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளிவந்துவிட்டது. இதுகூட தெரியாமல் எதிரணி உறுப்பினர்கள் உளறுகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...