தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடி ஆராய்வு!

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்றுக் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் முற்பகல் 11 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய அரசியல் குழு சந்திப்பு மாலை 4 மணி வரை நீடித்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், பொன். செல்வராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ். குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் குழு உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அரசியல் குழுவில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் இருவரும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். எனினும், சாணக்கியன் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

கட்சியின் மத்திய குழுவை விரைந்து கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

#SriLankaNews

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version